உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பாவம்

0

Posted on : Saturday, June 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாட்டில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டது.அதனால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு முனிவர், ஒரு யானைப் பாகனைப் பார்த்து,''உண்ண ஏதாவது உணவு இருந்தால் கொடு,''என்று கேட்டார்.''நான் எச்சில் படுத்தியஉணவு தான் இருக்கிறது,''என்றான் பாகன்.''பரவாயில்லை,அதையே கொடு,''என்று சொல்லி வாங்கிச் சாப்பிட்டார் முனிவர்.''இந்தாருங்கள்,இந்தத் தண்ணீரைக் குடியுங்கள்,''என்றான் பாகன்.;;அது எச்சில்,நான் குடிக்க மாட்டேன்,''என்றார் முனிவர்.''உணவுக்கு இல்லாத எச்சில்,தண்ணீருக்கு மட்டும் எப்படி வந்தது?''என்று கேட்டான்,பாகன்.முனிவர் சொன்னார்,''வேறு எங்கும் உணவு கிடைக்கவில்லை.இதைச் சாப்பிடாவிட்டால் என் உயிர்போயிருக்கும்.ஆனால் தண்ணீர் எங்கும் கிடைக்கும்.''
ஒரு தடவை தவறு செய்து விட்டால் தொடர்ந்து தவறு செய்தால் என்ன என்று நாம் நினைப்பதால் தான் பாவங்கள் அதிகரிக்கின்றன.வேறு வழியின்றி,நிர்பந்தத்தால் தவறு செய்தால் அது பாவமில்லை.நிர்ப்பந்தம் இல்லாத போது,வேண்டுமென்று தவறு செய்வது தான் பாவம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment