உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புத்திமதி

0

Posted on : Wednesday, June 02, 2010 | By : ஜெயராஜன் | In :

மசூதியிலிருந்து ஒரு ஞானி திரும்பிக் கொண்டிருந்தார்.வழியில் ஒரு குடிகாரன் கையில் ஒரு இசைக் கருவியுடன் வழியில் போவோர் வருவோரை ஆபாசமாகத் திட்டிக் கொண்டிருந்தான்.ஞானி அவனுக்குப் புத்திமதி சொல்ல,அவன் தனது இசைக் கருவியினால் அவர் தலையில் அடித்தான்.அவர் தலையும் உடைந்தது.இசைக்  கருவியும் உடைந்தது.
மறுநாள் காலை ஞானி அந்தக் குடிகாரனுக்கு சில இனிப்புப் பண்டங்களும் கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தார்.கூடவே ஒரு சிறு குறிப்பு;
''உங்களுடைய இசைக் கருவி உடைய என் தலை காரணமாக இருந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.இத்துடன் அனுப்பியுள்ள பணத்தைக் கொண்டு புதிய இசைக் கருவி வாங்கிக் கொள்ளவும்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment