உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எது ஞானம்?

0

Posted on : Friday, June 11, 2010 | By : ஜெயராஜன் | In :

''ஞானத்தில் சிறந்த ஞானம் எது?''என்று ஒரு ஞானியிடம் கேட்கப்பட்டது. ''இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பது தான்.''என்று ஞானி கூறினார்.;;அந்த ஞானம் தங்களுக்கு எப்படி வந்தது?''என்று கேட்டதற்கு ஞானி சொன்னார்,''கழுதையைப் பார்.உமக்குப் புரியும்.''கேட்டவருக்குப் புரியவில்லை.ஞானி விளக்கினார்,''இந்தக் கழுதை  தினமும் தன முதுகில் கனமான அழுக்கு மூடைகளை ஆற்றுக்குக் காலையில் சுமந்து செல்கிறது.மாலையில் அழுக்கு நீங்கிய துவைத்த துணிகளை ஆற்றிலிருந்து சுமந்து வருகிறது.ஆனால் கழுதை போகும் போது அழுக்கு மூடைகளை சுமந்து செல்கிறோமே என்று வருத்தம் அடைவதும் இல்லை.திரும்பும் போது சுத்தமான துணிகளைச் சுமந்து வருகிறோம் என்று மகிழ்ச்சி அடைவதும் இல்லை.இதைப் பார்த்துத் தான் நான் ஞானம்அடைந்தேன்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment