உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரித்து சிரித்து

0

Posted on : Tuesday, June 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு இடத்தில் காந்தி,ஜான்சி ராணி ,வீர சிவாஜி ஆகியோரின் சிலைகள் இருந்தன.அந்த வழியே போன ஒருவரிடம் காந்தி சிலை சொன்னதாம்,''இதோ பாரப்பா,அவங்க இரண்டு பெரும் ஜம்முன்னு குதிரை மேலே உட்கார்ந்திருக்காங்க!எனக்கும் ஒரு குதிரை தரக்கூடாதா?''வந்த ஆள் சிலை பேசுகிறதைப் பார்த்து ,ஒரு மந்திரியிடம் போய் சொல்லி அவரை அழைத்து வந்தார்.காந்தி சிலை கேட்டதாம்,''என்னப்பா,ஒரு குதிரையை நான் கேட்டால் ஒரு கழுதையைக் கூட்டி வந்திருக்கிறாயே!''
**********
அமெரிக்க விஞ்ஞானி; நாங்கள் ஒரு கருவி கண்டு பிடித்துள்ளோம்.அதன் முன்னால் யாரும் பொய் பேச முடியாது.
இந்திய விஞ்ஞானி; இது ஒன்றும் புதிதில்லை.இந்தியர்களாகிய நாங்கள் அந்த மாதிரிக் கருவியைத்தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம்.
**********
நோயாளி ; ஒரு வாரமா உடம்பு சரியில்ல,டாக்டர்.
டாக்டர் ; ஒரு வாரமா ஏன்இங்கு வரலை?
நோயாளி ; அதான் சொன்னேனே,உடம்பு சரியில்லையின்னு.
**********
''மூணு பேர் ஆத்தில குதிச்சு நீந்தினாங்க..அதில ஒருத்தர் முடி தான் நனைந்து இருந்தது.''
'அது எப்படி?'
''மீதி ரெண்டு பேர் தலையும் வழுக்கை.''
**********
நாவலாசிரியர் ; தெரியுமா உனக்கு?கொஞ்ச நேரத்துக்கு முன்னால்
புத்தகம்  வாங்க வந்த ஒருவன் அந்தக் கடையிலிருந்து நான் எழுதிய நாவல் ஒன்றைத் திருடிக் கொண்டு போய் விட்டானாம்.
மற்றவர்; அதற்கான் தண்டனையை அவன்  சீக்கிரம் அனுபவிப்பான்.
**********
''நேத்து ராத்திரி டி.வி.இல வானிலை  அறிக்கை கேட்டாயா?''
;நான் கேட்கலை.அவங்கதான் சொன்னாங்க.'
**********
''அறுபதடிஉயர ஏணியிலிருந்து விழுந்து விட்டேன்.நல்ல வேளை,சிறு காயம் கூட இல்லாமல் தப்பிச்சிட்டேன்.'
'ஆச்சரியமா இருக்கே,எப்படி?'
''நான் விழுந்தது ஏணியின் இரண்டாவதுபடியிலிருந்து தானே!''
**********
முதலாளி/; கோழிப் பண்ணையில் வேலைக்கு வந்தால் கோழி முட்டையைத் திருட மாட்டாயே?
தொழிலாளி;கேட்டுப் பாருங்க எசமான்,நான் முன்னே வேலை பார்த்த கப்பல் கம்பெனியிலே ஒரு கப்பலைக் கூடத் திருடினதில்லீங்க.
**********
ஒரு விவசாயி வங்கிக்கு சென்று,இரண்டாயிரம் ரூபாய் கடன் கேட்டான்.'உன்னிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றன?"என்று அதிகாரி கேட்டார்.''இருபது மாடுகள் ''என்றான் விவசாயி.கடன் கொடுக்கப் பட்டது.சில மாதங்கள் கழித்து விவசாயி நிறைய பணத்துடன் வங்கிக்கு வந்து,கடனை அடைத்தான்.மீதிப் பணத்துடன் புறப்பட்ட அவனை பார்த்து அதிகாரி,'கையிலிருக்கும் பணத்தையும் இந்த வங்கியிலேயே போட்டு விடுங்களேன்.'என்றார்.சந்தேகப் பார்வையுடன் விவசாயி கேட்டான்,''உங்களிடம் எத்தனை மாடுகள் உள்ளன?''
**********
யாருக்கும் சுலபமாகப் பணம் கொடுக்காத வட்டிக் கடைக் காரர் ஒருவரிடம் கடன் வாங்க வந்தார் ஒருவர். வட்டிக் கடைக்காரர் ஒரு சோதனை வைத்தார்.'என் கண்ணில் ஒன்று போலிக்கண்.அதை சரியாகக் கண்டு பிடித்தால் கடன் தருகிறேன்.'என்றார்.வந்தவர் சரியான விடையை சொல்ல,வட்டிக் கடைக்காரர் அதிசயத்துடன்,'எப்படி சரியாகச் சொன்னீர்கள்?'என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''அந்தக் கண்ணில் தான் கொஞ்சம் கருணை இருப்பதாகத் தெரிந்தது.''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment