உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தாமதம்

0

Posted on : Tuesday, June 08, 2010 | By : ஜெயராஜன் | In :

சாலையின் நடுவில் பெயிண்ட் கொடு போட ஒருவர் நியமிக்கப் பட்டார்.முதல் நாள் ஐந்து கிலோமீட்டர் தூரமும்,இரண்டாம் நாள் மூன்று கிலோமீட்டர்தூரமும்,மூன்றாம் நாள் ஒரு கிலோ மீட்டர் தூரமும் அவர் பெயிண்ட் கொடு போட்டார்.நாளுக்கு நாள் வேலை தாமதமாவதைக் கண்ட அதிகாரி,அந்த ஆள் மீது நம்பிக்கை இருந்த போதும் கூப்பிட்டுக் கண்டித்தார். பெயிண்டும் கையுமாக நின்ற அந்த வேலையாள் சொன்னார்,''அதை ஏன் கேக்குறீங்க?நானும் நாளுக்கு நாள் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் தான் உழைக்கிறேன்.ஆனால் பெயிண்ட் டப்பா இருக்கிற தூரம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறதே!ஒவ்வொரு தடவையும் இவ்வளவு தூரம் போய் பிரஷ்ஷில் தொட்டுக் கொண்டு வர வேண்டியிருக்கிறதே!அதுதான் காரணம்.''அதிகாரிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment