உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உயர்ந்தவர் யார்?

0

Posted on : Sunday, June 20, 2010 | By : ஜெயராஜன் | In :

மகா விஷ்ணு : நாரதா,பெரியது எது?
நாரதர் :பூமி.
விஷ்ணு :உலகில் முக்கால் பாகம் நீர்.கால் பாகம் தானே நிலம்?
நாரதர் :தண்ணீர் தான் பெரியது.
விஷ்ணு :அகத்தியர் தவத் தீயை அணைக்க ஏழு கடலையும் குடித்தாராமே?
நாரதர் :அகத்தியர் தான் பெரியவர்.
விஷ்ணு :இவ்வளவு பெரிய வானில் அவர் ஒரு சிறு நட்சத்திரம் தானே?
நாரதர் :வானம் தான் பெரிது.
விஷ்ணு :வானமே,என் ஒரு பாத அடிதானே?
நாரதர் :பிரபோ,நீங்கள் தான் பெரியவர்.
விஷ்ணு :நீ கூறினாயே,நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம்,காற்று இந்த பஞ்ச பூதங்களால் ஆனா என் பக்தன் தான் உயர்ந்தவன்.அவனதுஉள்ளத்தில் தானே நான் பிடிபட்டுக் கிடக்கிறேன்?ஆக பக்தன் தானே உயர்ந்தவன்?
நாரதர் :ஆம்,பிரபு.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment