உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஞாபக சக்தி

0

Posted on : Sunday, June 27, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிழவன்,தன மரணப் படுக்கையில்,தன மனைவியை அழைத்து,''நான் இறப்பதற்கு முன் சிலவற்றை உன்னிடம் சொல்ல வேண்டும்.அதாவது பக்கத்தில் உள்ள தையல்காரன் நமக்கு பத்தாயிரம் ரூபாயும்,பக்கத்து வீட்டுக்காரர் ஐயாயிரம் ரூபாயும்,என் தம்பி இருபதாயிரம் ரூபாயும் தர வேண்டும்.இவைகளை மறந்திடாமல் ஞாபகமாகக் கேட்டு வாங்கு.''என்றான்.இதைக் கேட்ட அவன் மனைவி மிக மகிழ்ச்சியுடன் ,தன பிள்ளைகளிடம் கூறினாள்,'உங்கள் அப்பா மிக நல்ல மனிதர்.அற்புதமானவர். சாகும் தருவாயிலும் அவரது ஞாபக சக்தி எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்று பாருங்கள்.'அந்தக் கிழவன் மீண்டும் பேசினான்,''நான் ஒன்றைச் சொல்ல விட்டுவிட்டேன்.நம்முடைய வீட்டு சொந்தக்காரருக்கு நான் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.''இதைக் கேட்ட மனைவி,'ஒ, சாகப்போற நேரத்தில் இவரது மன நிலை சரியாய் இல்லை.ஏதேதோ உளறுகிறார்.'என்று கத்தினாள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment