உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முன் முடிவு

0

Posted on : Thursday, June 10, 2010 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் எந்த விஷயத்தை அணுகும் போதும் நாமே ஒரு முன் முடிவு செய்து கொள்ளாமல் நடுநிலையோடு அணுகுவதுமிக அவசியம். முன் முடிவோடு அணுகும் போது அதன் மீது நமக்கு இருக்கும் உடன்பாடோ,முரண்பாடோ உண்மையைக் காண முடியாமல் நம் கண்களையும் மனதையும் குருடாக்கிவிடும்.''அவரா?அவர் அப்படித்தான் சொல்வார்.''''அதுவா,அது அப்படித்தான் இருக்கும்.''என்று ஒரு முன் முடிவு எடுத்துக் கொண்டுஒரு விஷயத்தை அணுகுபவர்களால் உண்மை நிலையைக்காண முடியாது.முன் முடிவுக்காரர்களிடம் முட்டிக் கொள்வதை நாம் எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment