உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வாங்க சிரிக்கலாம்

0

Posted on : Friday, June 25, 2010 | By : ஜெயராஜன் | In :

'எப்படிங்க வாழ்க்கை?'
''மாமூல் வாழ்க்கைதானுங்க.''
'அப்போ சம்பளம் அப்படியே மிச்சம்னு சொல்லுங்க.'
**********
'முட்டைக்கு நடுவில என்ன இருக்கு?'
''மஞ்சள் கரு தான்.''
'இல்லை,ட் என்னும் எழுத்து தான்.'
**********
''ஒரு ஐம்பது பைசா காணாமல் போனதற்காக இருட்டில் தேடிக்கிட்டு இருக்காயே,காலையில் தேடக்கூடாதா?'
''அட,காலையிலிருந்து தான் தேடிக்கிட்டிருக்கேன்.''
**********
புலவர்: உங்கள் கடையிலே ரவா வாங்க வேண்டும் என்பது என் பேரவா.நான் வரவா?இல்லை என் பையனை அனுப்பித்தரவா?
கடைக்காரர்: ஒரே தொந்தரவா  போச்சு.
**********
தாய்: மகனே,உன்னை உளுந்தும் பெருங்காயமும் வாங்கக் கடைக்கு அனுப்பினால் நீ கீழே விழுந்து பெருங்காயத்துடன்    வந்திருக்கிறாயே?
**********
''புளிரசம் வைக்கவா,மிளகு ரசம் வைக்கவா என்பதில் உனக்கும் உன் மாமிக்கும் ஏற்பட்ட சண்டை என்னாச்சு?''
'அக்கம் பக்கத்தில வந்து சமரசம் செஞ்சாங்க.'
**********
''இங்கு சப்தம் செய்யாதீர்கள்''என்று ஒரு அரசு அலுவகத்தில்  ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.குறும்புக்காரர் ஒருவர் அதன் பக்கத்திலேயே,'இல்லையென்றால் நாங்கள் எழுந்து விடுவோம்.'என்றுஎழுதி வைத்தார்.
**********
காதல் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்ட தந்தை கேட்டார்,''அவனிடம் ஏதாவது பணம் இருக்கிறதா?''மகள் ஆச்சரியத்துடன் கேட்டாள்,''இதே கேள்வியைத்தான் அப்பா அவரும் கேட்டார்.'
**********
''கண்ணே, என்னிடம் பணம் இருக்கிறது என்பதற்காகத்தான் என்னைக் காதலிக்கிறாயா?''
'இல்லை,என்னிடம் பணம் இல்லை என்பதற்காகத்தான் காதலிக்கிறேன்.'
**********
விபத்தில்  நினைவிழந்த கணவன்,நினைவு வந்ததும் கேட்டான்,''நான் சொர்க்கத்தில் இருக்கிறேனா?''மனைவி சொன்னாள்,'நான் இங்கே இருக்கிறேன் தெரியவில்லையா?'

**********
''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment