உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏன்வருகிறது?

0

Posted on : Monday, June 28, 2010 | By : ஜெயராஜன் | In :

கொட்டாவி,ஏப்பம்,விக்கல்,பொறை,இருமல் இவை ஏன் வருகின்றன?
இவை எல்லாமே நம் உடல் செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகளே.
கொட்டாவி: நமக்குக் களைப்பு ஏற்படும் போதும்,மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல்.
ஏப்பம் : நாம் உண்ட உணவில் அதிகப்படியான புரதப் பொருட்கள் இருந்தாலும்,புளிப்புப் பொருட்கள் இருந்தாலும் இவற்றைச் சிதைக்கும் பொழுது ஏற்படும் வாயுவை வெளியேற்றும் ஒரு செயல்.
விக்கல் :உதரவிதானம் சரிவர சுருங்கி விரிந்து செயல் பட முடியாத போது ஏற்படும் ஒரு சுவாசச் சிக்கல்.
பொறை :உணவுப் பாதையில் செல்ல வேண்டிய உணவு சுவாசப் பாதையில் நுழைந்து பாதை மாறுவதால் ஏற்படும் விளைவு.
இருமல் : சுவாசப் பாதையில் ஏற்படும் ஒரு வித உறுத்தல் இருமலாக வெளி வருகிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment