வீட்டின் வரவேற்பறை. உச்சியில் ஊஞ்சல் கட்டப்பட்டு ஒரு கிளி.அந்தக் கிளியின் ஒரு காலில் பச்சை நிற நூலும்,மறுகாலில் சிவப்பு நிற நூலும் கட்டப்பட்டுக் கீழே தரை வரை தொங்கிக் கொண்டிருந்தன.வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்ததும் வீட்டுக்காரர் பச்சை நூலை ஒரு சுண்டு சுண்டினார்.உடனே கிளி,''வாங்க!வாங்க!வணக்கம்!சௌக்கியமா?''என்றது. விருந்தாளி விடை பெற்றுச் செல்லும் போது வீட்டுக்காரர் சிவப்பு நூலை சுண்டினார்.உடனே கிளி,''போயிட்டு வாங்க!அடிக்கடி வாங்க!நன்றி,''என்றது.விருந்தாளி வியந்து கூவினார்,''என்ன ஆச்சரியம்!பச்சை நூலை இழுத்தால் கிளி வரவேற்றுப் பேசுகிறது!சிவப்பு நூலை இழுத்தால் விடை கொடுக்கிறது!இரண்டையும் சேர்த்து இழுத்தால் என்னாகும்?''கிளி அவசரமாகக் கத்தியது,''அறிவு கெட்ட முட்டாளே,கீழே விழுவேன் !''
|
|
Post a Comment