உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வகுத்தல்

0

Posted on : Sunday, June 06, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் தன நண்பனிடம் சொன்னான்,''எங்கள் வீட்டில் நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள்.சிறு வயதில் எங்களுக்கு ஒரு பிரச்சினை.நாங்கள் மூவரும் இரு நூறு ஆடுகளை மேய்க்க வேண்டியிருந்தது.எங்களுக்குள் அதனால் அடிக்கடி சண்டை வந்தது.''நண்பன் சொன்னான்,''மூன்று பேர் இருநூறு ஆடுகளை மேய்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம்!சரி,பின் என்ன செய்தீர்கள்?அவன் சொன்னான்,''எங்கள் அப்பா மேலும் நூறு ஆடுகள் வாங்கினார்.அதன் பின் தான் பிரச்சினை முடிந்தது.''நண்பன் அதிர்ச்சி அடைந்தான்.''இருநூறு ஆடு மேய்ப்பதே சிரமம்.அதிலே மேலும் நூறு ஆடுகள் வாங்கியபின் எப்படி பிரச்சினை தீரும்?மேலும் சிரமம் கூடத்தானே செய்யும்?''என்று நண்பன் கேட்க அவன்சொன்னான்,''மூன்று நூறை மூன்றால் வகுப்பது எளிதல்லவா?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment