உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புத்திசாலி

0

Posted on : Wednesday, June 16, 2010 | By : ஜெயராஜன் | In :

'ஒரே ஒரு ரூபாய் வைத்து,அதற்குள் எள்,புண்ணாக்கு,எண்ணெய்,விறகு  இத்தனையும் வாங்கிக் கொடுத்து மீதிச் சில்லரையும் தருபவர் தான் என் கணவர்,'என்றாள் ஒரு அழகான இளம்பெண்.கல்யாணம் நடக்குமா என்று கவலை கொண்டார் அவள் தந்தை.ஒருவன் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய்,அரை ரூபாய்க்கு ஒரு விவசாயியிடம் எள் செடி வாங்கிக் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு மீதி காசையும் கொடுத்தான்.பின் அவன் விளக்கம் சொன்னான்,''இச்செடியில் எள் இருக்கிறது.எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது.புண்ணாக்கும் இருக்கிறது.எள் செடி காய்ந்தால் விறகு.''புத்திசாலி கணவனைக் கண்டுகொண்டாள் அந்தப் பெண்..

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment