உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எதிர்மறை எண்ணம்

0

Posted on : Wednesday, June 30, 2010 | By : ஜெயராஜன் | In :

'நேர்மறையான சிந்தனைகளின் அதிசயக்கத்தக்க முடிவுகள்'என்ற தலைப்பில் டாக்டர் பீலே என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.அதில் அவர் சொல்கிறார்,''நம் வாழ் நாள் முழுவதும்  நமக்குத் தேவையில்லாத பயங்களைக் கொண்டுள்ளோம்.முக்கியமில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.ஒவ்வொருவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அஞ்சுகிறோம்.ஆனால் உண்மையில் யாரும் அப்படிக் கவனிப்பதில்லை.''ஒரு இளைஞன் ஒரு நாள் பீலேயிடம் சொன்னான்,'என்னுடைய மூக்கு நீளமாக இருப்பதால் யாருக்கும் என்னைப் பிடிப்பதில்லை.'''அவ்வாறு உன் மூக்கைக் கண்டுஉன்னை வெறுப்பவர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட முடியுமா?''என்று பீலே அவனிடம் கேட்டார்.இளைஞன் ஆறு பேரின் பெயர்களைத் தெரிவித்தான்.டாக்டர் பீலே அந்த ஆறு பேருக்கும் தனித்தனியே தொலை பேசி மூலம் பேசினார்.இளைஞனிடம்  வித்யாசமான,குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதை அவர்கள் கவனித்திருக்கிறார்கள் என்பது பற்றி விசாரித்தார்.ஒருவன் சொன்னான்,'அவன் நட்பில் சிறந்தவன்.'அடுத்தவன் சொன்னான்,'அவன் கணக்கில் புலி.' ஒரு பெண் சொன்னாள்,'அவன் பிரமாதமாக நடனம்ஆடுவான்.'யாருமே  அவனுடைய மூக்கைப் பற்றிக் குறிப்பிடவேயில்லை.டாக்டர் தன்னுடைய விசாரணை முடிவை அந்த இளைஞனிடம் இவ்வாறு தெரிவித்தார்,''உன்னுடைய மூக்கைப் பற்றி எதிர் மறையான எண்ணம் கொண்டிருக்கும் ஒரே நபர் நீ தான்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment