உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெறுமானம்

0

Posted on : Saturday, April 17, 2010 | By : ஜெயராஜன் | In :

தன நாட்டையும் செல்வத்தையும் குறித்து மிகவும் கர்வம் கொண்டிருந்த ஒரு அரசன் ஒரு ஞானியைப் பார்க்க சென்றிருந்தார்.அவரைப் பற்றி நன்கு அறிந்த ஞானி அவரை வரவேற்றபின் பேச ஆரம்பித்தார்.
ஞானி ;நீங்கள் ஒரு பாலைவனத்தில் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என எண்ணிக் கொள்ளுங்கள்.கடுமையான தாகம்.எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.தாகத்தால் நாவறட்சி.அப்போது ஒருவன் ஒரு அழுக்குப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக்  கேட்டால் என்ன செய்வீர்கள்?
அரசன்; சந்தேகம் என்ன?தண்ணீரை வாங்கி பாதி நாட்டைக் கொடுப்பேன்.
ஞானி;  சரி,அந்த அழுக்கு தண்ணீரைக் குடித்ததால் வியாதி வந்து யாராலும் குணப்படுத்த முடியாத நிலையில்,யாராவது ஒருவர் அதைக் குணப்படுத்தும் மூலிகையைக் கொண்டு வந்து அதற்கு ஈடாக மீதி நாட்டையும் கேட்டால் கொடுப்பீர்களா?
அரசன்; கட்டாயம் மீதி நாட்டைக் கொடுத்து மூலிகையைவாங்குவேன்.
ஞானி;  அப்படியானால்,கேவலம் ஒரு பாத்திர அழுக்கு நீரும்,ஒரு  மூலிகைச் செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து  உங்களுக்கு ஏன் கர்வம்?
அரசன் வெட்கத்தினால் தலை கவிழ்ந்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment