உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மேகங்கள்

0

Posted on : Thursday, April 15, 2010 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவின் கோடீஸ்வரர் ஒருவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தன மகனை அருகில் அழைத்து சொன்னார்,''மகனே!என் வாழ்க்கையிலிருந்து  செல்வம் மகிழ்ச்சியைத் தராது என்பதை தெரிந்து கொண்டிருப்பாய்.என்று நினைக்கிறேன்.''
மகன் சொன்னான்,''அப்பா!நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் உங்கள்  வாழ்விலிருந்து ஒன்று தெரிந்து கொண்டேன்.செல்வமிருந்தால்,உங்களுக்கு எந்த வகைத் துன்பம் வேண்டுமோ,அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.இது நல்ல விஷயமல்லவா?நீங்கள்மகிழ்ச்சியாய் இல்லை என்பது எனக்குத் தெரியும்.ஆனால் உங்களுக்குப் பிடித்த துன்பத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்.ஏழைக்கு இந்த வாய்ப்பு ஏது?அவனது துயரம் சூழ்நிலையால் அவன் மீது சுமத்தப் பட்டது.அதை அனுபவிப்பதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை.பணக்காரனின் துன்பத்திற்கும் ஏழையின் துன்பத்திற்கும் இது தான் வேறுபாடு.ஏழை தனக்கென வாய்த்த மனைவியால் மட்டுமே துன்பப்பட  வேண்டி வரும்.ஆனால் பணக்காரன் எந்தப் பெண்ணால் துன்பம் வேண்டுமோ,அவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதி பெற்று விடுகிறான்.இது ஒரு முக்கியமான,மகிழ்ச்சியான விஷயம் அல்லவா?''
ஆழமாக ஆராய்ந்து பார்த்தால்,இன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.எனக்கு இன்பம் தருவது உங்களுக்கு துன்பமாக இருக்கலாம்.ஒரு கோடி ரூபாய் என்னிடம் இருந்து அதில் ஒரு பாதியை உங்களிடம் நான் இழந்து விட்டால்,ஐம்பது லட்சம் இருந்தும் கூட எனக்கு துக்கமே உண்டாகிறது.ஒன்றுமே இல்லாதிருந்த உங்களுக்கு ஐம்பது லட்சம் கிடைத்தவுடன்,உங்களுக்கு மகிழ்ச்சியில் பைத்தியமே பிடித்து விடும். எப்படியோ நாமிருவரும் பொருளாதார ரீதியில் ஒரே நிலையில் தான் இருக்கிறோம்.ஒவ்வொருவர் கையிலும் ஐம்பது லட்சம்.நான் சுவரில் தலையை மோதிக் கொண்டு கதற நீங்கள் ஆனந்த வசப்பட்டு கொண்டாடி மகிழ்கிறீர்கள்.
ஆனால் நினைவில் வையுங்கள்!உங்கள் மகிழ்ச்சி நீடிக்காது.கிடைத்தது போய் விடுமோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும்.அது போல என் துக்கமும்மெல்லக் கரைந்து போகும்.ஏனென்றால் இழந்தவன் அதைச் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான்.
வாழ்க்கை வழிகள் விசித்திரமானவை.என் மகிழ்ச்சி உங்கள் மகிழ்ச்சியாகாது.என் துயரமும் உங்கள் துயரம் ஆவதில்லை.இன்றைய என் மகிழ்ச்சி கூட எனது நாளைய மகிழ்ச்சியாவதில்லை.இன்றைய கணத்தின் மகிழ்ச்சி அடுத்து தொடரும் என்று சொல்ல வழியில்லை.இன்ப துன்பங்கள் வானில் நகரும் மேகங்களைப் போல.அவை வரும் போகும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment