உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வரலாறு

0

Posted on : Monday, April 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆங்கிலச் சரித்திர ஆசிரியர் எட்மன்ட் பர்க்,நாற்பது வருட கால முயற்சியில் உலக சரித்திரத்தை எழுதினார்.ஒரு நாள் அவர் வீட்டுக்குப் பின்புறம் பல சாட்சிகளுக்கு நடுவே பட்டப்பகலில் ஒரு கொலை நடந்தது.இவர் அதைக் கேள்விப்பட்டு,பின்னால் ஓடி அங்கிருந்த மக்களிடம் எப்படி ஒருவன் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றான் என்று அதிர்ச்சியுடன் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான் பதில்  சொன்னார்கள்.அவரால்  நம்பவே முடியவில்லை.ஏனெனில் எல்லோர் முன்னிலையிலும் அக்கொலை நடந்தது.ஆனால் அதைப் பற்றி எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்?இப்போது வாழ்க்கையில்  அவர் செய்த தவறு புரிந்தது.உடனே  வீட்டினுள் சென்று தன நாற்பது வருட உழைப்பைத்  தீயிட்டுக் கொளுத்தினார்.அந்த வரலாறு ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து எழுதப்பட்டது.அவர் நினைத்தார்,''இப்போது நடந்த சம்பவத்தைக் கண்ணால் பார்த்தவர்களேவெவ்வேறு மாதிரியாகச் சொல்லும் போது,புத்தரைப் பற்றியோ ஏசுவைப் பற்றியோ நான் சேகரித்த செய்திகள் எவ்வளவு சரியாக இருக்க முடியும்?பல ஆயிரக் கணக்கான வருடங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சிகள் இப்போது எழுதும் போது எப்படி துல்லியமாக இருக்க முடியும்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment