உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புனிதம்

0

Posted on : Wednesday, April 21, 2010 | By : ஜெயராஜன் | In :

பெரும் புகழ் பெற்ற கபீர் தாசர் இஸ்லாம் மதத்தில் பிறந்தாலும் ஜாதி மத பேதங்களை மீறி மனித நேய தத்துவங்களை உலகுக்குச் சொன்னவர்.ஒரு முறை,சில பிராமணர்கள் கங்கை நதியின் புனிதமாக்கும் தன்மை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.ஒரு மரக் கோப்பையில் கங்கை நீரை நிரப்பி,'குடியுங்கள்,' என்று அவர்களிடம் நீட்டினார் கபீர்.பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர்தரும் கோப்பையைத் தொடுவதா என்று அவர்கள் தயங்கினர்.கபீர் பளிச்சென்று கேட்டார்,''என் கோப்பையை கங்கை நீர் புனிதமாக்காது என்றால் என் பாவங்களைக் கழுவி புனிதமாக்கும் என்று எப்படி நான் நம்புவது?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment