உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தங்க மனசு

0

Posted on : Sunday, April 04, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு பணக்காரன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்.தூரத்தில் இரண்டு  ஆண்கள் புற்களைப் பறித்துத் தின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் காரை நிறுத்தி அவர்களிடம் விபரம் கேட்க,அவர்களும் வறுமையினால் புல்லைச் சாப்பிடுவதாகக் கூறினர்.''சரி என்னோடு வீட்டுக்கு வாருங்கள்,''என இருவரையும் அவன்  அழைத்தான்.இருவரும் தன மனைவி,குழந்தைகளை விட்டுவிட்டு எப்படி வருவது என யோசிக்க,ஒரு நிமிடம் யோசித்துவிட்டு  அவர்களையும் வரச்சொல்லி அனைவரையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.''உங்களுக்குத் தங்கமான மனசு,''என அவர்கள் அனைவரும் வாயாரப் புகழ்ந்தார்கள்.''சந்தோசமா வாங்க,என் பங்களாவைச் சுற்றி மூன்று அடி உயரத்துக்கு நிறையப் புல் வளர்ந்திருக்கு.''
என்றான் அந்த தங்க மனசுக்காரன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment