உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள் --7

0

Posted on : Sunday, April 25, 2010 | By : ஜெயராஜன் | In :

பணத்தைக் கொண்டு நாய் வாங்கிவிடலாம்;ஆனால் அன்பைக் கொண்டு தான் அதன் வாலை அசைக்க முடியும்.
**********
பணக்காரர்கள் உடல் நலம் கெடும் போது தான் பணத்தின் வலுவில்லாத தன்மையை உணர்கிறார்கள்.
**********
நியாயவான் மக்களின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்;
இரக்கமுள்ளவன் கடவுளின் இதயத்திற்கு அருகில் இருக்கிறான்.
**********
வார்த்தைகள் பூப்போன்றவை.அவற்றைத் தொடுக்கும் விதத்தில் தொடுத்தால்  மதிப்பைப் பெற முடியும்.
**********
இறைவன் சுமைகளைத் தந்தார்;ஆனால்
தோள்களையும் தந்தாரே.
**********
மனிதன் பிறந்தது வெற்றி அடையவே;தோல்விக்குக் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க அல்ல.
**********
அதிருப்தி களுக்கெல்லாம் பெயர் சுயநலமே.
**********
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்.
**********
பொருந்தாத அலங்காரமெல்லாம் அற்பத்தனத்தின் அறிகுறிகளாகும்.
**********
''நான் சோம்பேறி,''என்பதைத்தான் சிலர் நாசூக்காக 'எனக்கு நேரமே கிடைக்கவில்லை,'என்று சொல்கிறார்கள்.
**********
துரதிருஷ்டத்தின் போது துணிவுடன் இருங்கள்;
நல்லதிருஷ்டத்தின் போது பணிவுடன் இருங்கள்.
**********
முட்டாளிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிவதில்லை.ஆனால் உலகுக்குத் தெரிகிறது.அறிவாளியிடம் உள்ள பிழை அவனுக்குத் தெரிகிறது.ஆனால்  உலகுக்குத் தெரிவதில்லை.
**********
தெரிந்தாலொழிய பேசக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் தீர்மானிப்பானே யானால்  உலகில் பரிபூர்ண நிசப்தம் நிலவும்.
**********
ஏமாற்றங்களைத் தகனம் செய்ய வேண்டும்.
பாடம் பண்ணிப் பத்திரப் படுத்தக்கூடாது.
**********
என்ன நேர்ந்திருந்தாலும் சரி;
எதுவும் நேராதது போல் நடந்து கொள்ளுங்கள்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment