உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வெற்றி வாகை

0

Posted on : Wednesday, April 28, 2010 | By : ஜெயராஜன் | In :

'வெற்றி வாகை'சூடினார் என்று வெற்றி பெற்றவர்களைக் குறிப்பிடுகிறார்கள். வெற்றி என்றால் தெரியும்.வாகை என்றால் என்ன?சங்க காலத்தில் போர் புரியும் போது போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றவாறு மலர்களை அணிந்து கொள்வது வழக்கம்.இறுதி வெற்றி பெற்றவர் வாகை எனப்படும் மலரைச் சூட்டிக் கொள்வது வழக்கம்.இதற்குத்தான் 'வாகை சூடுதல் என்று பெயர்.
**********
கர்நாடக இசைக்கு அப்பெயர் எப்படி வந்தது?
கர்ணம் என்றால் காது.அடகம் என்றால் இனிமை.காதுக்கு இனிமையான இசை என்று பொருள்.
**********
எந்த முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்ற குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment