உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இயேசு-யூதாஸ்

0

Posted on : Monday, April 12, 2010 | By : ஜெயராஜன் | In :

யாராவது உங்களை அவமரியாதை செய்தால் நீங்கள் பலவீனமாக  உணர்கிறீர்கள்.தொந்தரவுக்கு உள்ளாகிறீர்கள்.எப்படிப் பலி வாங்குவது என்று யோசிக்கத் தொடங்குகிறீர்கள்.அந்த மனிதன் உங்களைக் கைப் பற்றிவிட்டான். இப்போது நீங்கள் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.நாள் கணக்காக,இரவு பகலாக,பல மாதங்களாக,பல வருடங்களாகக் கூட இதை நினைத்துஉங்களால் தூங்க முடியாது.உங்களுக்குக் கெட்ட கனவுகள் வரும்.மக்கள் சிறிய விசயங்களுக்காக முழு வாழ்க்கையையும் வீணடிக்கிறார்கள்.மற்றவர்,அது தாய் தகப்பன்,நண்பர்,உறவினர் யாராக இருந்தாலும் உங்களை அவமரியாதை  செய்தால் அந்தக் காயம் வயதான பின்னரும் ஆறுவதில்லை.அந்தக் காயம் இன்னும் திறந்து புதிது போல்  இருக்கும்.யாராவது அதைத் தொட்டால் நீங்கள் வெடித்து விடுவீர்கள்.இந்தக் காயத்தை வளர விடாதீர்கள்.இது உங்களைக் காயப்படுத்தி விட  அனுமதிக்காதீர்கள்.24 மணி நேரம் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக் கொள்ளுங்கள்.பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள்.என்ன நிகழ்கின்றது என்று பாருங்கள்.நீங்கள் இதுவரை உணர்ந்தேயிராத சக்தி உங்கள் மீது பொழிவதை உணர்வீர்கள்.ஒரு முறை நீங்கள் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும்.பிறகு நீங்கள் இதுவரை செய்து கொண்டிருந்த முட்டாள் தனத்தைப் பார்த்து சிரிப்பீர்கள்.வருத்தங்கள்,எதிர்ப்புகள்,பழிகள் என்று உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருந்ததை நினைத்து சிரிப்பீர்கள்.
உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது.உங்களைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது.நீங்கள் தான் இயேசு..நீங்கள் தான் யூதாஸ்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment