உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஷா அதி

0

Posted on : Monday, April 19, 2010 | By : ஜெயராஜன் | In :

பேராசைக்காரன் உலகம் முழுவதையும் பெற ஆசைப் படுகிறான்.திருப்தியுற்ற மனிதன் ஒரு ரொட்டித் துண்டிலே ஆறுதல் பெறுகிறான்.செல்வத்தைக் காட்டிலும் திருப்தியோடு கூடிய  வறுமை சிறந்தது.
**********
ஒருவன் இதயத்தைத் துன்புறுத்தும் செய்தியை நீ அறிந்திருந்தால் மௌனமாக இரு.மற்றவர்கள் அந்த செய்தியைத் தெரிவிக்கட்டும்.வசந்தத்தின் செய்தியை   குயில் தெரிவிக்கட்டும்.மற்றதை ஆந்தையிடம் விட்டுவிடு.
**********
சந்நியாசியைப் பார்த்து அரசன் கேட்டான்,''என்னிடம் வெகுமதி பெரும் நோக்குடன் என்றேனும் என்னை ஞாபகப் படுத்திப் பார்த்ததுண்டா?''  சந்நியாசி சொன்னார்,'ஞாபகம் உண்டு.எப்பொழுது என்றால்  நான் ஆண்டவனை மறந்தபோது.'
**********
வேதனையுடனே இருவர் இருந்தனர்.ஒருவன் செல்வம் இருந்தும் அனுபவிக்காதவன்;மற்றவன் அறிவு இருந்தும் பயன்படுத்தாதவன்.
**********
மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
நீ யாருக்கு இரக்கம் காட்டினாலும் அவர்களின் துக்கம் அனைத்தும் ஓடி  விடுகிறது.சுக துக்கம்,மத மாச்சர்யம் இவற்றை  ஒரு நொடியில் ஒரேயடியாய் அழித்து விடுகிறாய்.உலகம் இதைத்தான் பெரும் பயணம் என்கிறது.
ஏ மரணமே,உனக்குக் கோடி வந்தனம்!
**********
பக்திமான் ஒருவர் கண்ட கனவில் அரசன் சொர்க்கத்திலும்,துறவி  நரகத்தில் இருப்பதாகவும் தெரிந்தது.முரண்பட்ட இந்நிலைக்கு அவர் பெரியவர் ஒருவரிடம் விளக்கம் கேட்டார்.
பெரியவர்  சொன்னார்,''துறவியிடம் காட்டிய அன்புக்குப் பரிசாக அரசனுக்கு சொர்க்கம் வழங்கப்பட்டது.அரசனிடம் கொண்டிருந்த தொடர்புக்குத் தண்டனையாக துறவிக்கு நரகம் தரப்பட்டது.''
**********
கோடைக்காலத்தில் பழுத்துக் குலுங்கும் மரம் குளிர் காலத்தில் ஒரு இலை கூட இல்லாமல் ஆகி விடுகிறது.இந்த உண்மையைத் தெரிந்து  கொள்ளாத ஊதாரி,தனக்கு ஒரு கஷ்டம் வரும் என்பதை மறந்து விடுகிறான்.
**********
துறவி ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டார்,''ஆண்டவனே,கொடியவர்கள் மீது கருணை வையுங்கள்.ஏனென்றால் நல்லவர்கள் மீது ஏற்கனவே கருணை காட்டி விட்டீர்கள்.நல்லவர்களாக அவர்களைப் படைத்ததே அந்தக்  கருணையால் தானே!''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment