உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள் -6

0

Posted on : Thursday, April 01, 2010 | By : ஜெயராஜன் | In :

பேராசையைப் போக்க நினைத்தால் அதன் தாயாகிய
ஆடம்பர குணத்தை ஒழிக்க வேண்டும்.
******
வெறும் கைகள் என்பது மூடத்தனம்.
பத்து விரல்கள் என்பது மூலதனம்.
******
பிறரை முகஸ்துதி செய்பவன் அவன்
கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
******
நீங்கள்  கோபம்  கொண்டாலும்
பாவம் செய்யாதிருங்கள்.
******
கோபம் முட்டாள்தனத்தில் தொடங்கி
தவறுக்கு வருந்துவதில் போய் முடிகிறது.
******
யார் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் கொள்கிறோமோ,
அவர்களிடம் தான் அடிக்கடி சினமும் கொள்கிறோம்.
சினம் என்பது தலை கீழான அன்பு.
******
என்னிடம் உதவி பெற்றவன்,அதை மறந்தால்
அது அவன் குற்றம்.ஆனால்
நான் உதவி செய்யா விட்டால்
அது என் குற்றம்.
******
நம் தந்தை சொன்னதெல்லாம் சரிதான்
என்று நாம் உணருகின்ற காலத்தில்
'நீ சொல்வதெல்லாம் தவறு'
என்று சொல்ல நமக்கொரு மகன்
பிறந்து விடுகிறான்.
******
எங்கு யாரிடம் எந்தத் தவறைக் கண்டாலும்
அதை உன்னிடம் நீ திருத்திக்கொள்.
******
திறமை என்பது ஒருவனை உயரே கொண்டு போகும்.
நல்ல குணம் தான் அவனை கீழே விழாமல் பாது காக்கும்.
******
ஒன்றைச் செய்ய விரும்பினால் வழியைக் கண்டு பிடிக்கிறாய்.
செய்யாமல் இருக்க விரும்பினால் காரணங்களைக் கண்டு பிடிக்கிறாய்.
******
தோற்று விட்டோமோ என்று ஒருவன் தயங்கிக் கொண்டிருக்கும் போதே,
நிறைய தோல்விகள் கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறான்.
******
சுமப்பதெல்லாம் பாரமுமில்லை;
பாரமாக நினைப்பவை சுமைகளுமில்லை.
******
கெட்ட தந்தை கூடத் தன மகன் கெட்டவனாக
இருக்க விரும்புவதில்லை.
******
சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறித்தனமாய் இருப்பதில்லை.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment