உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முத்தம்

0

Posted on : Sunday, April 04, 2010 | By : ஜெயராஜன் | In :

பலா மரத்தடியில் படுத்துக் கிடந்த ஒரு கரடியை வேட்டையாட எண்ணி ஒருவன் குறி பார்த்து சுட்டான்.ஆனால் குண்டு குறி தவறி பக்கத்து மரத்தில் பட்டது.கோபத்துடன் அவனைக் கொல்ல வந்த கரடிமனம் மாறி அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து அனுப்பியது.அடுத்து தொடர்ந்து மூன்று நாட்கள் இதே மாதிரி நடந்தது.நான்காவது நாளும் குறி தவறிய போதுகரடி அமைதியாய் அவனருகில் வந்து,''நான் கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுப்பது உனக்குப் பிடிச்சிருந்தா சொல்ல வேண்டியது தானே?அதுக்காக ஏன் குறி பார்த்து சுடுகிற மாதிரி நடிக்கிறே?''
********
ஒரு எறும்பும் ஒரு யானையும் காதலித்துக் கல்யாணம் முடித்துக் கொண்டன.அடுத்த நாள் காலை யானை செத்துக் கிடந்தது.எறும்பு அழுதவாறே சொன்னது,''அடப்பாவி,ஒரு நாள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக,என்வாழ் நாளெல்லாம் குழி தோண்ட வச்சிட்டியே,உன்னைப் புதைக்க.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment