உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நோயின் போது

0

Posted on : Thursday, April 29, 2010 | By : ஜெயராஜன் | In :

வேறு எப்போதையும் விட நோயுறும் போது தான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன.வீடு கற்றுத்தர மறந்ததை நோய்ப் படுக்கை கற்றுத் தந்து விடுகிறது.வாழ்வின் அருமையையும், யார் நமக்கு நெருக்கமானவர்கள்,யார் நம்மைப் பயன் படுத்திக் கொண்டவர்கள் என்பது நோயுறும்  போது தான் தெரியத் தொடங்குகிறது.உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. இயல்பாக இருக்கும் போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதேயில்லை.    வலியின் முன்னால் வயதோ,,பணமோ,பேரோ,புகழோ,எதுவும் நிற்பதில்லை. வலி மனிதனை உண்மைக்கு மிக நெருக்கம் ஆக்குகிறது.தன்னைப் பற்றி தான் கொண்டிருந்த அத்தனை பெருமிதங்களையும் ஒரே நிமிடத்தில் கரைத்து அழித்து விடுகிறது.நோய் ஒரு வகையில் நமது உடலை மட்டுமல்ல, ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.
நோயின் போது, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப் பட்டது போலவும்,தன்னை அடியோடு உலகம் மறந்து போகும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.தான் படுக்கையில் இருக்கும் போது மற்றவர்கள் இயல்பாக  இருப்பது  குறித்து நோயாளிக்கு  ஆத்திரம் வருகிறது.தனக்காக மற்றவர்கள் வருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் படுகிறான்.வாழ்க்கை தன்னைப் புரிய வைப்பதற்குசில  நிகழ்வுகளையும்,தருணங்களையும் ஏற்படுத்துகிறது.உடலில் தோன்றிய நோய் நீங்கக் கூடும்.ஆனால் நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ் நாள் முழுவதும் கூட இருக்கும்.
                                                              __எஸ்.ராமகிருஷ்ணன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment