உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏன்,எதற்கு?

0

Posted on : Saturday, April 03, 2010 | By : ஜெயராஜன் | In :

தாய் ஒட்டகத்திடம் குட்டி கேட்டது,''அம்மா,எதற்காக நம் கால்கள் நீளமாக இருக்கின்றன?''
தாய்: பாலைவன  மணலில் புதையாமல் நடப்பதற்காகத் தான்.
குட்டி: கண் இமை இவ்வளவு சிறிதாக நிறைய முடியுடன் இருக்கிறதே,அது ஏன்?
தாய்: மணல் புயல் வந்தால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான்.
குட்டி: அது சரி,பின்புறம் ஏன் திமில் இருக்கிறது?
தாய்:அது தண்ணீர் சேமித்துக்கொள்ள.அப்படி இருந்தால்  தான் பாலைவனத்தில் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
குட்டி:நாம் இருக்கும் மிருகக் காட்சியில் தான் பாலைவனமே  இல்லையே?  பிறகு இவை எல்லாம் நமக்கு எதற்கு அம்மா?

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment