உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தன்னம்பிக்கை

0

Posted on : Friday, April 23, 2010 | By : ஜெயராஜன் | In :

தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன்.அவன் ஒரு தடவை சென்னையிலிருந்து விழுப்புரம் செல்ல ரயிலில்  ஏறினான்.ரயிலில் கூட்டம் அதிகம்.வண்டியில் ஏறி மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டான்.அவன் கீழ் சீட்டிலிருந்த மனிதனிடம்,''சார்,நான் விழுப்புரத்தில் இறங்கனும்.நான் தூங்கினா முழிக்கிறது சிரமம்.விழுப்புரம் வந்ததும் மறந்திடாமல் என்னை இறக்கி விடுங்க.''என்றான்.அவரும் ,'நான் தஞ்சாவூர் போகிறேன். விழுப்புரம்  வந்ததும் உங்களைத் தட்டி எழுப்புகிறேன்.நீங்க முழிச்சிக்க வில்லைன்னா என்ன பண்றது?'என்றார்.
அவன் சொன்னான்,''சார்,அதைப் பத்திக் கொஞ்சமும் கவலைப் படாதீங்க. எழுப்பிப் பாருங்க.நான் முழிச்சிக்க வில்லைன்னா  எப்படியாவது என்னை உருட்டியாவது பிளாட்பாரத்தில் தள்ளி விடுங்க,''
அவரும் சரியென்று சொல்லிட்டார்.காலையில் ரயில் தஞ்சாவூரில் நின்றது.அவர் இறங்கி பிளாட்பாரத்தில் நின்ற போது திடீரென  அந்த ஆள்  வந்து இவர் கையைப் பிடித்தான்.விழுப்புரத்தில் இறங்க வேண்டியவன் தஞ்சாவூர் வந்து விட்டான்.அவனுக்கு ரொம்பக் கோபம்.''என்ன சார்,படிச்சுப் படிச்சுச் சொன்னேனே.விழுப்புரம் வந்ததும் என்னை உருட்டியாவது தள்ளி விடச் சொன்னேனே.இப்ப தஞ்சாவூருக்கு வந்து விட்டேனே.இந்நேரம் நான் தஞ்சாவூரில் அவசியம் இருக்க வேண்டுமே,''என்று புலம்பினான்.அந்த தஞ்சாவூர்க்காரர்.எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்ததும்  அவனுக்கு இன்னமும் கோபம்.''என்ன சார்,நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன்.நீங்க பாட்டுக்கு எதையோ யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களே?''என்று கேட்டான்.அவர் சொன்னார்,'அதுக்கு இல்லைப்பா.தவறுதலா தஞ்சாவூருக்கு வந்த நீயே இவ்வளவு சத்தம் போடுறியே.....,தவறுதலா நான் ஒருத்தனை விழுப்புரத்திலே வெளியே உருட்டி விட்டேனே,அவன் இந்நேரம் எவ்வளவு சத்தம் போட்டுக்கிட்டிருப்பான்னு யோசிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கேன் ...'என்றாராம்.
                                                        __தென்கச்சி சுவாமிநாதன் 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment