உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மேலான வாழ்க்கை

0

Posted on : Monday, April 26, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நகரத்தின் மதில் பிளவு ஒன்றில் கொத்து மலர்கள் பூத்துக் குலுங்கின.பாதுகாப்பான இடத்தில் அவை அமைந்திருந்ததால் காற்று,புயல்,மழை, வெயில் இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை.
மதிலுக்கு அந்தப் பக்கம்,தரையில் ஒரு ரோஜாப் புதர் இருந்தது.ரோஜாக்களின்  அழகு,மதில்  மேல் இருந்த காட்டு மலர்களின் அழகை மங்க செய்து கொண்டிருந்தன.அவமானப்பட்ட அந்த மலர்கள் கடவுளிடம் ரோஜா மலர்களாக மாற்றும்படி வேண்டிக்கொண்டன.கடவுள் சொன்னார்,''ரோஜாவின் வாழ்க்கை சிரமமானது.புயலடித்தால் வேரோடு ஆடும்.மலர்ந்தால்,பறிக்க வருவார்கள்.இப்போது இருக்கும் பாதுகாப்பான நிலையை ஏன் இழக்க வேண்டும்?''
பக்கத்திலிருந்த வேறு காட்டு மலர்களும் ரோஜாவாகி இன்னல்களை அனுபவிக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டன.அனால் அம்மலர்கள் கடவுளிடம் ஒரு நாள் முழுவதுமாவது ரோஜாவாக மாற வேண்டிக்கொண்டன.
கடைசியில் கடவுள் சம்மதித்துவிட்டார்.மலர்கள் ரோஜாவாக மாறிவிட்டன. உடனே சோதனைகளும் சிக்கல்களும் ஆரம்பமாகிவிட்டன.புயலும் மழையும் அதன் வேர்களையே அசைத்தன.பின் வெயில் அதன் இதழ்களைக் காய வைத்து விட்டன.மழை அடித்து,அதை அடியோடு பெயர்த்துக் கீழே தள்ளி விட்டது.அவை எல்லையற்ற துன்பத்தை அனுபவித்தன.
காட்டு மலர்கள் சொல்லின,''நாங்கள் சொல்லியும் நீங்கள் கேட்கவில்லை.முன்பு எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது?சில பிரச்சினைகள் இருந்தாலும் அவை பழக்கப் பட்டவையாய் இருந்தன.  நம்மால்சமாளிக்க  கூடியவை.இப்போது சிக்கலில் வம்பாக மாட்டிக் கொண்டீர்கள்.''

 மாறிய ரோஜா ஒன்று  சொன்னது,'நீங்கள் மடையர்கள்.பாதுகாப்பான சூழலில் மதில் மேல் காலம் பூராவும் உப்பு சப்பில்லாமல் வாழ்வதைக் காட்டிலும் ஆபத்தான சூழலில் ரோஜாவாய் வாழ்வது மேல்.நான் கதிரவனோடு உறவாடினேன்.விண்மீன்களுடன் பேசினேன்.என்   ஆன்மாவை நான் பெற்றேன்.பூரண நிறைவடைந்தேன்.நான் முழுதாக வாழ்ந்து விட்டேன்.இப்போது முழுதாக இறக்கப் போகிறேன்.ஆனால்,உங்கள் வாழ்வு,வாழும் மரணம் மட்டுமே.''
பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை,மந்தமான,இருண்ட,செத்துப் போன வாழ்வைக் காட்டிலும் மேலானது.ஒளி மயமானது.
                                                                                          __ஓஷோ

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment