உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொய்

0

Posted on : Thursday, April 01, 2010 | By : ஜெயராஜன் | In :

வேறு தேசத்தைச் சேர்ந்த வேறு மொழி பேசுகிற குற்றவாளிகளைப் பிடித்து வந்தவர்கள்,அவர்களின் குற்றங்களை விளக்கிச் சொல்லச் சொல்ல அரசன்  தண்டனை விதித்துக் கொண்டிருந்தான்.ஒருவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க,கைதி அவன் மொழியில் மன்னரை மோசமாகத் திட்டினான்.அவன் சொல்வது புரியாது அருகில் இருந்த அமைச்சரிடம் மன்னன் விளக்கம் கேட்க,மந்திரியும்,''அரசே,கோபத்தை அடக்கி பிறரை மன்னிப்பவர்க்கு சொர்க்கம் உண்டு என்கின்றான்,'என்றார்.அரசர் உடனே மனம் மாறி,தூக்குத் தண்டனையை மாற்றி மன்னித்து விட்டார்.பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு அமைச்சர் அரசர் காதில்,''அரசே!இந்த அமைச்சர் உங்களிடம் பொய் சொன்னார்.அந்தக் கைதி உண்மையிலேயே உங்களை மிகவும்   திட்டினான்.''என்றார்.அரசர் புன்னகையோடு அவரிடம் சொன்னார்,''நீங்கள் கூறிய உண்மையை விட அவர் கூறிய பொய் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.'' சமாதானத்தை உண்டாக்கும் பொய் சச்சரவுகள் உண்டாக்கும் மெய்யை
விட மேலானது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment