உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மணி என்ன?

0

Posted on : Sunday, April 25, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வெளி நாட்டுக்காரர் நம் ஊரைச் சுற்றிப்  பார்க்க வந்தார்.வயல் வழியே செல்கையில் வழியில் படுத்திருந்த கிராமவாசியிடம் ,'மணி என்ன?'என்று கேட்டார்.அவன் அருகில் இருந்த கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்துவிட்டு  'மணி மூன்று 'என்றான்.பயணிக்கு ஒரே ஆச்சரியம்.திரும்பவும் அந்த வழியே வரும்போது அந்த கிராமவாசி சரியாகச் சொல்கிறானா என்பதை அறிய ஒரு கைக் கடிகாரத்துடன் வந்து,'மணி என்ன?'என்று கேட்டார்..அவனும் கழுதையின் வாலைத் தூக்கிப் பார்த்து,''மணி நான்கு''என்றான். அது சரியாகத் தான் இருந்தது.ஆச்சரியத்துடன் கிராமவாசியிடம்,''கழுதை வாலிலிருந்து  எப்படி சரியான  நேரத்தைக் கண்டுபிடிக்கிறாய்?''என்று கேட்டார்.''தூரத்தில் இருக்கும் மணிக்கூண்டை என் கழுதையின் வால் மறைத்துக் கொண்டிருந்தது.அதனால் வாலைத் தூக்கி மணிக் கூண்டைப் பார்த்து நேரம் சொன்னேன்.''என்றான் அவன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment