உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வேஷ்டி

0

Posted on : Tuesday, April 20, 2010 | By : ஜெயராஜன் | In :

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.நாடகத்தில் வந்த சக்கரவர்த்தி தமக்கு எந்தெந்த அரசர்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார்.மந்திரி,''வங்க அரசர் தங்கம் கட்டினார்;கலிங்க அரசர் நவமணிகள் கட்டினார்.''என்று வரிசையாக  சொல்லிக் கொண்டே போனார்.சக்கரவர்த்தி திடீரென,'சோழ அரசர் என்ன கட்டினார்?'என்று கேட்க,மந்திரியாக நடித்தவர் விழிக்க,வேலைக்காரராக நின்ற கலைவாணர்,''வேஷ்டி,வேஷ்டி,''என்று சொல்லிக் கொண்டு போக  அனைவரும் சிரித்தனர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment