உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முதியவர்களுக்காக

0

Posted on : Wednesday, March 10, 2010 | By : ஜெயராஜன் | In :

இறைவா,
உனக்குத் தெரியும்,நான் முதுமை அடைந்து கொண்டிருப்பது.
எல்லா விசயத்திலும் மூக்கை நுழைத்து அபிப்பிராயம் சொல்லாதிருக்க
                   செய்..
பிறர் தம் வலியும்  வருத்தமும் கேட்கும் கரிசனம் கொஞ்சம் வளரச் செய்.
வெறுமையை பொறுமையாய் ஏற்கச்செய்.
உதடுகள் இருக்க மூடச்செய்.இல்லையெனில் நாளுக்கு நாள் அதிகரிக்கும்
                  என் காயங்களையும் வலிகளையும் பிறரிடம் பகிரும் இன்பம்
                  தேடும் என் மனம்.
இத்தனை ஆண்டுகளாக நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்த
                  வாழ்க்கைப் பாடத்தை இப்போதேனும் சரியாகப் புரியச்செய்.
இனிமையாக என்னை இருக்கச்செய்.
நீண்ட காலம் வாழ்ந்து விட்டதாலேயே மற்றவர்களை விட அறிவாளி என
                  என்னும் அகந்தை ஓடச்செய்.
சமீபத்தில் நடந்த மாற்றங்களை சகித்துக் கொள்ளும் மனப்பான்மை
                  பெருகச்செய்.
உனக்குத் தெரியும் என்று என் முடிவு என...அதுவரை
ஓரிரு நண்பர்களையாவது உலகில் எனக்காக இருக்கச்செய்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment