உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தட்டிக் கழிக்காதே!

0

Posted on : Tuesday, March 30, 2010 | By : ஜெயராஜன் | In :

அரசுத் துறையைச் சேர்ந்த ஒருவன் சாலை ஓரத்தில் மூன்று  அடி இடைவெளியில் குழிகள் தோண்டிக் கொண்டே சென்றான்.பின்னால் வந்தவன் மண்ணைப் போட்டுக் குழியை மூடிக் கொண்டே சென்றான்.அதைப் பார்த்த ஒருவர்,''இது என்னப்பா பைத்தியக் காரத் தனமாய்வேலை செய்கிறீர்களே?'' என்று கேட்க,'நாங்கள் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத்தான்  செய்கிறோம்.நாங்கள்  மூன்று பேர்.ஒருவன் குழி தோண்ட வேண்டும். அடுத்தவன் அதில் செடி வைக்க வேண்டும்.மூன்றாவது ஆள் அதன் பின் மண்ணைப் போட்டுக் குழியை மூட வேண்டும்.இன்று செடி வைப்பவன் லீவ்  போட்டு விட்டான்.நாங்கள் இருவரும் போய் அதிகாரியிடம் விபரம் சொன்னோம். அதற்கு அவர்,''ஏதாவது காரணம் சொல்லி வேலையைத் தட்டிக் கழிக்கப் பார்க்காதீர்கள்.போய் உங்கள் வேலையைப் பாருங்கள்,''என்றார். நாங்களும் வந்து எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.'என்றார்கள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment