உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சித்திரவதை

0

Posted on : Sunday, March 28, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் மன நோய் மருத்துவ மனையில் பத்து ஆண்டுகள் சிகிச்சை பெற்றான்.மன நோய் குணமான உணர்வு ஏற்பட்ட பின் அவன் அந்த டாக்டரிடம் சென்று தான் குணமாகி விட்டதாக கூறினான்.டாக்டர் சொன்னார்,   'பத்து ஆண்டுகள் மருத்துவ சிகிச்சையில் இருந்து விட்டாய்.இன்னும் ஒரு பத்து நாட்கள் பொறு.அனைத்து சோதனைகளையும் ஒரு முறை நான் பார்த்து விடுகிறேன்.'பத்து நாள் சோதனைக்குப் பின் அவன் பூரண குணம் அடைந்ததாக சொல்லி அவன் மருத்துவ மனையிலிருந்து செல்லலாம் என டாக்டர் கூறினார்.பின் அவனிடம் மருத்துவ மனையிலிருந்த காலம் பற்றி என்ன நினைப்பதாகக் கேட்டார்.அவன் சொன்னான்,''மன நோயாளியாக இருந்த பத்து ஆண்டுகள் பத்து நாட்கள் போலப் பறந்து விட்டது.குணமான பின் இங்கிருந்த பத்து நாட்கள்,பத்து ஆண்டுகளைக் கழித்தது போல் சித்திரவதைப் படுத்தி விட்டது.''டாக்டரே இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment