உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இது சிரிக்க

0

Posted on : Saturday, March 13, 2010 | By : ஜெயராஜன் | In :

கர்நாடக சங்கீதத்தில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு பாடகர்.அப்போது முன் வரிசையில் ஒரு அழகான வாலிபர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழகுள்ள துரைஇவர் யாரடி?''என்று பாடினார்.அடுத்து ஒரு குள்ளமான ரசிகர் ஒருவர் வந்து அமர்ந்தார்.பாடகர்,''அழ  குள்ள துரை இவர் யாரடி?''என்று பிரித்துப் பாடினார்.பின்னர் ஒரு வளர்ந்த வாலிபர் வந்தார்.அவரைப்பார்த்தவுடன்,''அழகுள்ள துரை ஆறடி'' என்று புலவர் ஆளுக்கேற்ற மாதிரி பாடி கை தட்டலைப் பெற்றார்.
**********
பாடகர்  கர்னாடகசங்கீதம் ஒன்றைப் பாடி ஆரம்பித்த போது,எல்லோரும் எழுந்து போக ஆரம்பித்தனர்.காரணம் வேறொன்றுமில்லை.''தூது போனாயே,''என்னும் வரியை,''தூ தூ போ நாயே,'' என்று இழுத்துப் பாடியதால் வந்த வினை.
**********
கடற்கரையில் சிறுவன் அப்பாவிடம் கேட்கிறான்,''அப்பா அவர்யார்?'' 'அவரா,கடலை விற்பவர்.'
''அப்போ,இவ்வளவு பெரிய கடல் அவருக்கு சொந்தமா?''
*********
''வரவர எனக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது.''
'அன்னைக்கு நான் தூரத்தில் போய்க் கொண்டிருந்தேன்.என்னை சரியாய் அடையாளம் தெரிந்து கூப்பிட்டாயே?'
''போகும் போது தானே,எனக்கு வரவரத்தான் கண்ணு தெரியலேன்னு சொன்னேன்.''
**********
ஒரு புலி தன்னுடைய கல்யாண வரவேற்பு விழாவுக்கு காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் அழைத்து வந்தது.அந்த இடத்தில் ஒரு எலி சந்தோசமாக நாட்டியமாடுவதைப் பார்த்து புலிக்குக் கோபம் வந்தது. ''என்ன தைரியம் இருந்தால் இங்கே வந்து நீ நாட்டியம் ஆடுவாய்?''என்று புலி ஆவேசமாகக் கத்தியது.எலி சொல்லியது,'சும்மா கத்தாதே,கல்யாணத்துக்கு முன் நானும் புலியாகத்தான் இருந்தேன்.'
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment