உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விலங்குகள்

0

Posted on : Saturday, March 06, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதனுக்கு ஆறறிவு.விலங்குகளுக்குஐந்தறிவு.எனினும் விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அச்சமின்மை:
விலங்குகள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் தருணங்கள் தவிர வேறு எப்போதும் அச்சப்படுவதில்லை.மனிதன் அச்சப்படாத விசயமே இல்லை.ஒரு சிங்கம் ஒரு மான் கூட்டத்தில் பாய்ந்தால் அவை ஒன்றொன்றும் ஒவ்வொரு திசையில் ஓடும்.ஆனால் சிங்கம் ஒரு மானைப் பிடித்து விட்டால் அடுத்த மானைப் பிடிக்காது.அதனால் மற்ற மான்கள் அதன் பின் அச்சமின்றி நடமாடும்.
தோல்வி கண்டு அஞ்சாமை :
ஒரு பூனை ஒரு  எலியைப் பிடிக்கத் துரத்துகிறது.எலி தப்பி விடுகிறது.பூனை இதைத் தோல்வியாகக் கருதித் துவள்வதில்லை.அது,அடுத்த எலி கிடைக்குமா என்று,சாதாரணமாகத் தேட ஆரம்பித்து விடுகிறது.மனிதன் ஒரு தோல்வி அடைந்தாலே வேதனைப் படுகிறான்;முடங்கி விடுகிறான்.
குழந்தைகளை முறைப்படி வளர்த்தல்:
விலங்குகள் குட்டிகளுக்கு இரை தேடி கொடுக்கின்றன.நடக்கக் கற்றுக் கொடுத்து,ஓடக் கற்றுக் கொடுத்து,பின் அவற்றை சுதந்திரமாக விடுகின்றன.மனிதனோ,மகன்,பேரன் என்று எல்லோரையும் சுமந்து அவர்களை முறையாக வளர்க்காமல் ,அவர்களை சுதந்திரமாய் வாழவும் விடுவதில்லை.
எதிர்  காலம் பற்றி அஞ்சாமை:
ஞானிகள் கூறுவது போல் நிகழ காலத்தில் வாழ்வது விலங்குகள் தான்.அவை நாளைய தினம் பற்றிக் கவலைப் படுவதில்லை.மனிதன் தான்,நாளை என்னவாகும்,வருங்காலம் எப்படி இருக்கும் என்று கவலைப் பட்டு இன்றைய மகிழ்வை இழக்கின்றான்.
வாழு,வாழவிடு:
மிருகங்கள்,தான் நன்றாக வாழ்வதுடன் தன இனத்தையும் நன்கு வாழ விடும்.மிருகங்கள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை,தன இனத்தில் யாரையும் கொலை செய்வதும் இல்லை.மனிதன் தானும் வாழமாட்டான்;மற்றவரையும் வாழ விட மாட்டான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment