உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அதிர்ச்சி

0

Posted on : Saturday, March 13, 2010 | By : ஜெயராஜன் | In :

மிக அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மாளிகைகளை உலகமே வியந்து பாராட்டும் வண்ணம் மன்னனுக்குக் கட்டிக் கொடுத்தான் ஒரு தச்சன்.ஆனால் அவனுக்கு ஒரு வருத்தம்.மன்னர் அவன் வேலைத் திறமை குறித்து ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்து பேசியதில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த தச்சன்  மன்னரிடம் சென்று தான் ஓய்வுபெறப்போவதாகக்கூறினான்.மன்னர்,''அதுஉன் விருப்பம்.ஆனால் அதற்குமுன் எனக்கு ஒரு அழகான மாளிகை கட்டிக் கொடுத்து விடு.''என்று சொன்னார்.வேறு வழியின்றி விருப்பமில்லாமல் ஏனோ தானோவென்று வேலை செய்து முடித்தான்.மன்னர் வந்து பார்த்து விட்டு,''இவ்வளவு தானா?இன்னும் வேலைப் பாடு இருக்கிறதா?''என்று வினவ,'இனி செய்வதற்கு ஒன்றுமில்லை,'என்றான் தச்சன்.மன்னர் மறுநாள் அவனை சபைக்கு வரச்செய்து,அவனைப் புகழ்ந்து பேசி,அவன் ஓய்வு பெறுவதை முன்னிட்டு  தனது பரிசாக அவன் புதிதாகக் கட்டிய வீட்டையே அவனுக்குப் பரிசாகத் தந்தார்.தச்சனால் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனது வீட்டைக் கட்டுகிறோம் என்று அறிந்திருந்தால் எவ்வளவு வேலைப்பாடு செய்திருக்கலாம்என்று புலம்பினான்.என்ன செய்வது?அவனது சலிப்பும் அக்கறையின்மையும் அவசரப் புத்தியும் தான் பலன் கிட்டாததன் காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment