உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அடுத்தவர் நிலை

0

Posted on : Wednesday, March 31, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒன்றுமேஇல்லாத விசயத்திற்கு நீங்கள் கோபப் படுகிறீர்கள்.நீங்கள் கதவைத்  திறக்க முயற்சித்து அது திறக்கவில்லை என்றால் பைத்தியமாகி விடுகிறீர்கள். கடிதம் எழுத முயற்சிக்கும் போது,பேனா நன்றாக எழுதா விட்டால் கோபப்  படுகிறீர்கள்.வேதனை அடைகிறீர்கள்.ஏதோ அந்தப் பேனா வேண்டுமென்றே செய்வதைப் போல்,அந்தப் பேனாவில் யாரோ அமர்ந்து கொண்டு உங்களைத் தொந்தரவு செய்ய முயற்சிப்பதாகக் கூட நினைக்கிறீர்கள்.ஒரு குழந்தை மேஜையை இடித்துக் கொண்டது என்றால் உடனே அந்த மேஜையை அடித்து விடும்.பிறகு அந்த மேஜையை எதிரியாகவே பார்க்கும்.இது தன்னையே முன்னிலைப் படுத்துதல்.ஒரு அறிவாளி இது போல் தன்னையே மையமாக நினைக்க மாட்டான். எப்போதும் அடுத்தவர் நிலையிலிருந்து தான் பார்ப்பான்.கதவு திறக்கவில்லை என்றால் திறக்க முயற்சிப்பான்.அங்கே யாரும் கதவை மூட முயற்சிக்கவில்லை.உங்கள் முயற்சியைத் தடுக்கவில்லை.அந்தக் கதவுடன் சண்டை  போட வேண்டியதில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment