உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வறுமை

0

Posted on : Friday, March 05, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை கலைவாணர் என்.எஸ்.கே.யைச் சந்திக்க ஒருவர் வந்தார்.''ஐயா, மூன்று வேளை சாப்பாடு போட்டு மாதம் ஐந்து ரூபாய் கொடுங்கள்.நீங்கள் விரும்பும் போதெல்லாம் நாதஸ்வரம் வாசிப்பேன்.''என்றார்.'அப்படியா சரி.இப்போதே வாசி,'என்றார் என.எஸ்.கே.வந்தவர் நாதஸ்வரம் வாசித்தார்.வாசிப்பில் சுருதி,தாளம்,ராகம் எதுவுமே சரியாக அமையவில்லை.
இசையைக் கேட்டுக் கொண்டிருந்த கலைவாணர் அதை நிறுத்தச் சொல்லி விட்டு நூறு ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து,'நீங்கள் நாதஸ்வரம் வாசிக்கவில்லை.உங்களது வறுமையைத் தான் வாசித்தீர்கள்.நன்றாகக் கற்றுக் கொண்டு பிறகு வந்து வாசியுங்கள்.இப்போது சாப்பிட்டு விட்டுப் போங்கள்.'என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment