உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மார்கஸ் அரேலியஸ்

0

Posted on : Friday, March 12, 2010 | By : ஜெயராஜன் | In :

மார்கஸ் அரேலியஸ் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.கிரேக்கத்தின் அரசனாக இருந்த போதும் ஒரு ஞானியாகவே வாழ்ந்தவர்.அவருடைய பொன் மொழிகளில் சில:
*கோபத்தில்  செய்யப்படும் பாவத்தை விட  ஆசையில் செய்யும் பாவமே மிக மோசமானது.
*நமது உடலின் உறுப்புக்களைப் போல ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு சேர்ந்திணைந்து செயல்படவே பிறந்துள்ளோம்.
*ஒரே பீடத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஊது பத்திகள் விரைவாக சிலவும்  மெதுவாக சிலவும் எரிந்து புகைந்து தணிகின்றன.இறுதியில் தணிந்து மறைதல் என்பது இரண்டுக்கும் ஒரே மாதிரி தானே?
*மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள்.நினைக்கிறார்கள்,செய்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்துவதை நிறுத்தும் போது தான்  பேரமைதி கிட்டுகிறது.நீ என்ன செய்கிறாய் என்பது மட்டுமே முக்கியம்.
*உனது வாழ்க்கை முறையை சற்று வசதியாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதைத் தவிர புகழால் வேறு என்ன பயன்?
*உனது புகழுரைகளால் தங்கத்தின் பளபளப்பும் வைரத்தின் ஒளி விடும் தன்மையும் மாறிவிடுமா?
*நாம் பேசுவதிலும் செய்வதிலும் பெரும்பான்மையானவை அவசியமற்றவை.அவற்றை விலக்கி விட்டால் அதிக நேரமும் கூடுதலான மன அமைதியும் கிடைக்கும்.
*'இது நல்லது,''இது கெட்டது,'என்னும் அவசரத் தீர்ப்பு வழங்க மனதை அனுமதியாதே.
*புற விஷயங்கள் பிரச்சினையே அல்ல.ஆனால் அவற்றைப்  பற்றிய நமது மதிப்பீடுகளே  பிரச்சினை.
*மற்றவர்களின் தவறுகளைப் பற்றிய எண்ணங்களை நீ சுமந்து கொண்டிராதே.அவற்றை அவர்களிடமே விட்டு விடு.
*செய்பவரைப் பார்க்காது அவரது செயல்களை மட்டும் சீர் தூக்கிப்பார்.
*அச்சத்தின் அடிப்படையில் பிரார்த்தனை செய்யாதே.ஆசை மற்றும் துயரத்தின் பொருட்டாகவும் வேண்டாம்.
*யாரோ என்னை இழிவாகப் பேசுகிறார்கள்.அது அவர்களது பிரச்சினை.மற்றவர்களை இழிவாகப் பேசாதிருப்பது என் கடமை.
*கோபத்திற்கும் துயரத்திற்கும் காரணமான விசயங்களை விட,அந்தக் கோபமும் துயரமும் தான் அதிக இழப்பைத் தருகின்றன.
*மற்றவர்களை நேசிப்பதை விட நம்மை நாமே அதிகம் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப் பற்றியே அதிகம் கவலைப் படுகிறோம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment