உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தரம்

0

Posted on : Sunday, March 14, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சமயம் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்கள் ஒரு கவிஞரைப் பார்க்க வந்திருந்தார்.கவிஞர் ஒரு தட்டில் சுடச்சுட இட்டிலி கொண்டு வந்து கட்டாயம் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்தினார்.கவிஞரின் வேண்டுகோளுக்காக அழ.வள்ளியப்பா இரண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்டார். அதைப் பார்த்த கவிஞர்,''என்ன இட்டிலி நன்றாக இல்லையா?''என்று கேட்டார்.அழ.வள்ளியப்பாவோ,'இல்லை...இரண்டாம் தரம்...'என்று இழுத்தார். நண்பர் அதிர்ச்சியுற்றார்.உடனே அழ.வள்ளியப்பா,'இல்லை,இல்லை.இட்டிலி முதல்தரம்!நான் தான் இரண்டாம் தரம்.'என்றார்.கவிஞர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.அதைப் புரிந்து கொண்டு அழ.வள்ளியப்பா சொன்னார்,'ஏற்கனவே நண்பர் ஒருவர் வீட்டில் சிற்றுண்டியை முடித்து விட்டேன்.இப்போது நீங்களும் வற்புறுத்தியதால் இரண்டாம் தரமாகச் சாப்பிட நேர்ந்தது.அதைத் தான் சொன்னேன்..'அர்த்தம் புரிந்து கவிஞர் நகைத்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment