உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யாருக்கு தாத்தா?

0

Posted on : Friday, March 19, 2010 | By : ஜெயராஜன் | In :

பெயர் தெரியாத ஒரு ராணுவ வீரரின் படம் ஒரு கடையில் விற்பனைக்காகத்   தொங்க  விடப் பட்டிருந்தது.அதை வாங்க விரும்பி ஒருவன் விலை கேட்ட போது,நூறு ரூபாய் என்று கடைக்காரர் சொன்னார்.ஆனால் அவனிடம் தொண்ணூறு ரூபாய் தான் இருந்தது.எனவே அப்படத்தை அவனால் வாங்க முடியவில்லை.இரு நாள் கழித்து நண்பன் ஒருவன் வீட்டிற்குச் சென்ற போது, அந்த வீட்டில் அவன் வாங்க நினைத்த ராணுவ வீரரின் படம் இருக்கவே,அதை ஆச்சரியத்துடன் பார்த்தான்.நண்பன் சொன்னான்,''இவர் தான் என் தாத்தா. ராணுவத்தில் பெரிய சேவை செய்தவர்.''இவன் பெரு  மூச்சு விட்டபடியே  நினைத்துக் கொண்டான்,'அன்று மட்டும் என்னிடம் இன்னும் பத்து ரூபாய் இருந்திருந்தால் இன்று இவர் என் தாத்தாவாக இருந்திருப்பார்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment