உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொருள் விளக்கம்

2

Posted on : Saturday, August 20, 2011 | By : ஜெயராஜன் | In :

நாம் உபயோகப்படுத்தும் பல வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவை.எனவே அதன் பொருள் நமக்குத் தெரியாமலேயே அவற்றை உபயோகிக்கிறோம்.உதாரணமாக சில வார்த்தைகள் அதன் பொருளுடன்;
வேணுகோபாலன்: வேணு என்றால் மூங்கில்.கோ என்றால் பசு.பாலன் என்றால் சிறுவன்.அதாவது மூங்கிலால் ஆன புல்லாங்குழல் ஊதி பசுக்களை கவர்ந்த சிறுவன் என்று பொருள்.
தாமோதரன்: தாம்பு என்றால் கயிறு.உதரன் என்றால் வயிற்றைக் கொண்டவன்.அதாவது கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன். யசோதா கண்ணனைக் கயிறு கொண்டு கட்டிய கதை தெரியுமே!
நவநீதம்: நவம் என்றால் புதியது;நீதம் என்றால்  எடுக்கப்பட்டது..  காலையில் பசும்பாலில் உறை குற்றி மாலையிலேயே  தயிரைக் கடைந்து எடுக்கிற வெண்ணை தான் நவநீதம்.
நாராயணன்: நாரம் என்றால் தண்ணீர்.அயனம் என்றால் மிதப்பது.தண்ணீரில் மிதப்பவன்.நாராயணன் பாற்கடலில் பள்ளி கொண்டவர் அல்லவா?
அனுமான்: துண்டிக்கப்பட்ட முக வாய் உடையவன்.ஒரு முறை இந்திரன் வஜ்ராயுதத்தால் தாக்கியதால் முகம் துண்டிக்கப்பட்டது.
சரஸ்வதி: சரஸ் என்றால் பொய்கை.வதி என்றால் வசிப்பவள்.மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள்.
பாகுபலி: பாகு என்றால் தோள்கள்:உருக்கு போன்ற தோள்கள் படைத்தவன்.
காஞ்சி: கா என்றால் பிரம்மா:அஞ்சித என்றால் வழிபட்ட.பிரம்மா வழிபட்ட இடம் என்று பொருள்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (2)

நல்ல பகிர்வு..
வாழ்த்துக்கள் ஐயா..

http://sempakam.blogspot.com/

என் பெயராகிய வேணுகோபால் இன் அர்த்தம் அறிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி ,நன்றி

Post a Comment