உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கலகல

0

Posted on : Saturday, August 20, 2011 | By : ஜெயராஜன் | In :

வீட்டுக்கு வந்த நண்பன் சொன்னான்,''அடேய் நண்பா!உன் மனைவி ஒரு அழகிய சித்திரம் போல இருக்கிறாள்.''கணவன் சொன்னான்,''நீ சொல்வது சரிதான் நானும் கூட அவளைத் தொங்கவிடலாம் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.''
**********
சர்கஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் அழுது கொண்டிருந்தான்.காரணம் கேட்டபோது அங்கு இருந்த யானை இறந்து விட்டதாகக் கூறினான்.''யானை மீது உனக்கு அவ்வளவு பாசமா?''என்று கேட்டபோது அவன் சொன்னான்,''இல்லை,அதைப் புதைப்பதற்கான குழியை நான்தான்  வெட்ட வேண்டும் என்று முதலாளி சொல்லி விட்டார்.''
**********
''நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது,''என்று ராம் சொல்ல கோபால் என்னவென்று கேட்டான்.ராம் சொன்னான்,''என் காதலியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று மாலை சென்றேன்.சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது.உடனே அவள் சர்வரைப் பார்த்து,'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள்,' என்றாள்.உடனே சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்.''
**********
கலா தன தோழியிடம் சொன்னாள்,''புதிதாக வந்திருக்கும் சேலை ஒன்றை என் கணவரிடம் சொல்லி வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.அவரை  மகிழ்ச்சி கொள்ளச் செய்ய அன்று அவருக்குப் பிடித்த உணவு வகைகளைத் தயாரித்தேன்.அவர் சாப்பிட்டபின்,அவரிடம்,''இம்மாதிரி உணவு சமைத்தால் எனக்கு என்ன கிடைக்கும்?'என்று கேட்டேன்.அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?''தோழி ஆர்வமுடன் என்ன சொன்னார் என்று கேட்க கலா சொன்னாள்,''உனக்கு விரைவிலேயே என் பெயரில் போட்டிருக்கும் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்கிறார்.''
***********
அம்மா கேட்டார்,''மகனே,இன்று தேர்வில் எத்தனை மார்க் வாங்கினாய்?'' மகன் சொன்னான்,''அம்மா,இன்று நான் நூறு மார்க் வாங்கியுள்ளேன்.''அம்மாவுக்கு ஆச்சரியம்.மிகுந்த மகிழ்ச்சியுடன் அவனைத் தட்டிக் கொடுத்தவாறே அவனுடைய விடைத்தாள்களை  வாங்கிப் பார்த்தார்.அவன் ஐந்து பாடங்களில் மொத்தம் நூறு மார்க் வாங்கியிருந்தான்.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment