உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எதிர்த்துப்பேசு

0

Posted on : Monday, August 29, 2011 | By : ஜெயராஜன் | In :

ஊருக்கு வந்த துறவியிடம் ஒருவன் சொன்னான்,''இந்த ஊரில் என்னை எல்லோரும் முட்டாள் என்று சொல்கிறார்கள் நான் என்ன சொன்னாலும் சிரிக்கிறார்கள்.என் பிரச்சினை தீர ஒரு வழிசொல்லுங்கள்.துறவி சொன்னார்,''நீ யார் எது பேசினாலும் அதை மறுத்துப்பேசு.யாரவது ஒருவனை நல்லவன் என்று சொன்னால் நீ தீயவன் என்று சொல்.கடவுள் உண்டு என்றால்  இல்லை என்று சொல்.ஏதாவது ஆணித்தரமாக யாராவது பேசினால் நிரூபிக்க முடியுமா என்று கேள்.''அவன் துறவியிடம் கேட்டான்,''அவர்கள் நிரூபித்து விட்டால் நான் முட்டாளாகிவிடுவேனே?''துறவி சிரித்துக்கொண்டே சொன்னார்,''யாராலும் நிரூபிக்க முடியாது.இந்த பிரபஞ்சம் மர்மமானது.வாழ்க்கை மர்மமானது.இதில் யாரும் எதையும் நிரூபிக்க முடியாது.பயப்படாதே.''அவன் துறவி சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.யார் என்ன சொன்னாலும் மறுத்துப் பேசினான்.எதைச்சொன்னாலும் நிரூபிக்கச் சொன்னான்.ஒருவராலும் அவனிடம் பேச முடிய வில்லை.ஊரில் அவனுக்கு மரியாதை கூடத் துவங்கியது.''அவன் இப்போது பெரிய அறிவாளி ஆகி விட்டான்,''என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்
                                       --கோகோல் என்ற இரஷ்ய எழுத்தாளரின் கதை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment