ஒருவர் தன நண்பரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கு ஒரு பன்றி வளர்க்கப்படுவதைக் கண்டார்.உடனே நண்பர் அப்பன்றியின் குணாதிசயங்களைப் பெருமையாகச் சொல்ல ஆரம்பித்தார்,''ஒரு முறை வீட்டில் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டது உடனே இந்த பன்றி அலாரம் அடித்து எல்லோரும் வந்து பெரும் சேதத்தைத் தவிர்க்க முடிந்தது.இன்னொரு முறை தொட்டியில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த என் பையனைக் காப்பாற்றியது.ஒரு முறை வந்த திருடனைக் கடித்ததில் அவன் ஓடியே விட்டான்.''வந்தவர்,''கேட்கவே மிக மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.அது சரி அது ஏன் மூன்று கால்களுடன் இருக்கிறது?''என்று கேட்டார்.நண்பர் சொன்னார்,''என்னதான் இருந்தாலும் ஒரு பன்றியை முழுதாக ஒரே நாளில் சாப்பிட முடியாதல்லவா?''
|
|
Post a Comment