உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

முட்டை

0

Posted on : Friday, August 19, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு முட்டையை வெளியிலிருந்து உடைத்தால் ஒரு உயிர் அழிக்கப்படுகிறது அதே சமயம் அந்த முட்டை உள்ளிருந்து உடைக்கப்பட்டால் ஒரு உயிர் வெளி வருகிறது.
******
''இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்றால் இத்தனை கோவில்கள் எதற்கு?''என்று ஒருவன் கேட்டான். ஆன்மீகவாதி  ஒருவர் சொன்னார்,''நம்மைச் சுற்றி முழுமையாகக் காற்று இருக்கிறது ஆனால் அதை உணர்வதற்கு நமக்கு காற்றாடி தேவைப்படுகிறதே!''
******
நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றின் பின்னணி,செய்த தவறுகளுக்காக இருக்காது.அவை சம்பந்தப்பட்ட அர்த்தமற்ற அதீத கற்பனைகளும் அவை விளைவிக்கும் துன்பங்களுமாகத்தான் இருக்கும்.
******
ஒரு செயலை செயலுக்காக செயலில் ஒன்றிச் செய்தலே கர்மயோகம்.அந்தச் செயலின் விளைவை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே ஒரு கர்ம யோகியின் வாழ்க்கை முறை.தன்னைவிட செயலே முக்கியம் என்கிற மனோநிலை ஒரு கர்மயோகியின் வாழ்க்கை நெறி.
******

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment