ஞானம் பெற விரும்பிய ஒருவன் இறைவனிடம் சென்று ஞானம் பெற வழி கேட்டான்.இறைவன் சொன்னார்,''அப்பா,இப்போது வெயில் மிக அதிகமாக இருப்பதால் தாகம் எடுக்கிறது எனக்கு முதலில் நீ கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,''அவனும் ஓடிச் சென்று முதலில் தென்பட்ட வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அழகிய இளம்பெண் கதவைத் திறந்தாள்.அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு அந்தப்பெண் மீது காதல் பிறந்தது.அந்தப் பெண்ணும் சம்மதிக்கவே அவளைத் திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளையும் பெற்றான்.ஒரு நாள் கடுமையான மழை பெய்தது.எங்கு பார்த்தாலும் தண்ணீர்.வீடுகள் அடித்து செல்லப்பட்டன.அவனும் தன மனைவியையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு சென்றான் அப்படியிருந்தும் அவர்களைத் தண்ணீர் இழுத்துச் சென்று விட்டது.அடுத்து அவனையும் தண்ணீர் இழுத்தபோது,''கடவுளே,என்னைக் காப்பாற்று,''என்று கத்தினான்.அப்போது இறைவன் அவனிடம் கேட்டார்,''அப்பா,தாகத்துக்கு தண்ணீர் கேட்டேனே,என்ன ஆயிற்று?''
|
|
Post a Comment