உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

என்ன பொருத்தம்!

0

Posted on : Monday, August 01, 2011 | By : ஜெயராஜன் | In :

 கணவன் மனைவி ஜோடியைப் பார்த்து 'என்ன பொருத்தம்!'என்று சொல்ல வேண்டுமா?சில டிப்ஸ்:
*கணவன் மனைவி இருவருக்குள்ளும் இரகசியம் என்பதே இல்லாமல் இருப்பதே உத்தமம்.சின்ன சின்ன விஷயமானாலும் மறைக்க வேண்டாம்.
*எந்தப் பிரச்சினை ஆனாலும் மற்றவரைக் கட்டாயப் படுத்தி சாதிக்க வேண்டாம்.மற்றவருக்கு முடியவில்லையா,விருப்பம் இல்லையா,விட்டு விடுங்கள்.
*எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதைத் தவிருங்கள்.மற்றவர் சொல்வதை மனப் பூர்வமாக  நம்புங்கள்.
*ஒரு தலைவலி ,ஜுரம் என்றால் கூட அலட்சியப்படுத்தாமல் சில நிமிடம் அருகில் அமர்ந்து இதமாகப் பேசுங்கள்.
*மற்றவர்கள்  எதிரில் விட்டுக் கொடுக்காமல் பேசப் பழகுங்கள்.மட்டம் தட்டாதீர்கள்.அப்படித் தப்பித்தவறி ஒரு சிரிப்புக்காகச் சொன்னாலும் முகம் சுளிக்காமல் புன்னகையுடன்,ஸ்போர்டிவாக ஏற்கப் பழகுங்கள்.
*ஒருவொருக்கொருவர் விருப்பு வெறுப்பு அறிந்து நடந்து கொள்ளுங்கள்..மற்றவரின் எண்ணங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு கூடுமானவரை அதன்படி நடக்க முயலுங்கள்.
*ஒருவர் மூடுக்குத் தகுந்தாற்போல அடுத்தவர் நடந்து கொள்ளுங்கள்.ஒருவர் கோபத்துடன் கத்தினால் அடுத்தவர் மௌனம் சாதியுங்கள்.
*'தேங்க்ஸ்','சாரி'போன்ற சொற்களை வீட்டிலும் உபயோகிக்கலாம்.அது அன்பை வளர்த்து வாழ்வின் பல் சுமைகளைக் குறைக்கும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment